பள்ளி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக மாணவர் அமைப்பினர் மீது வழக்கு பதிவு! October 17, 2018
கோவை சிங்காநல்லூரில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பள்ளி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக மாணவர் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை இருக்கூர் அரசு பள்ளி அருகே உள்ள சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கம், சி.பி.எம் மற்றும் DFYI அமைப்பினரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்த தூண்டி விடப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 10க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.