தமிழகம், புதுச்சேரியில் இருதினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! October 18, 2018
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருதினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா, தென்மேற்கு பருவமழை வரும் 20ஆம் தேதி முடிவடைவதாக கூறினார்.
அதன்பிறகு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வளி மண்டல காற்றின் மேலடுக்கு சுழற்சி தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.