வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி : மன்மோகன் சிங் October 27, 2018
நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல் தரமிழந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய தி பாரடாக்சியல் பிரைம் மினிஸ்டர் என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என சாடினார்.
இந்தியர்கள் அனைவருக்குமான பிரதமர் என கூறும் மோடி, நாட்டில் பரவலாக நடக்கும் வகுப்புவாத வன்முறை, கும்பல் வன்முறை ஆகியவற்றைக் கண்டும், கேட்டும் கருத்து தெரிவிக்காமல் மவுனமாகவே இருப்பதாக குற்றம்சாட்டினார்.