தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்! November 21, 2018
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வலுவான குறைந்த காற்றழுத்த பகுதி தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நிலவி வருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பரவலாகவும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.