Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 30 ஜனவரி, 2019

பன்றிக்காய்ச்சல்: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளி விவரம்! January 30, 2019

Image
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 169 வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், பன்றிக்காய்ச்சலால் இதுவரை 4,571 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 27 பேரும், மகாராஷ்ட்ராவில் 12 பேரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,103 பேர் உயிரிழந்ததாகவும், 14,992 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பன்றிக் கயாச்சல் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

source: ns7.tv