Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 16 பிப்ரவரி, 2019

கோயிலுக்குள் புகுந்து திருநங்கையின் தலையை துண்டித்து கொலை! February 16, 2019

source : ns7.tv
Image
தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக கோயிலுக்குள் புகுந்து திருநங்கையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடி எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்ற திருநங்கை, லூர்தம்மாள்புரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கும் மற்றொரு திருநங்கையான சக்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக்தியின் நண்பர் மருது என்பவர், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த ராஜாத்தியை தான் மறைத்த வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். 
பின்னர் ராஜாத்தியின் தலையை துண்டித்து கோயிலுக்கு அருகில் வீசிவிட்டு அங்கிருந்து மருது தப்பியோடிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மருதுவை தேடி வருகின்றனர்.