Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 13 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் பயங்கர சம்பவம்: ட்விட்டரில் கருத்து மோதல்!


Image
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான ஜோதிமணிக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் தமிழிசை, குற்றவாளிகள் தயவு தாட்சணியமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார். 
இதற்கு பதிலடி தரும் வகையில் ஜோதிமணி, பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து பதிவிட்ட பின், அரசியல் செய்யாதீர்கள் என்று வேறு வேறு வார்த்தைகளில் வருகிறது என பதிவிட்டார். 
தொடர்ந்து தமிழிசை மற்றொரு பதிவில், போராட்டங்களைவிட போராட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம் என பதிவிட்டார்.
இதற்கு ஜோதிமணி, அவை எல்லாம் வழக்கம்போல எழுதிக்கொடுத்து பரப்பப்படும் குறிப்பிட்ட வர்க்கத்தை சேர்ந்தவை எனவும், பெண்களை சூறையாடியவர்களை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் யார்? எனவும் ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

credit ns7.tv