Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 3 மார்ச், 2019

விமானப் படையினரிடமிருந்து பணத்தை எடுத்து அம்பானிக்கு கொடுத்து விட்டார் பிரதமர் மோடி : ராகுல் காந்தி March 02, 2019

Image
நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கும் விமானப் படையினரிடமிருந்து, ரூ.30,000  கோடி ரூபாயை எடுத்து, பிரதமர் மோடி அம்பானிக்கு கொடுத்துள்ளதாக, ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், ரபேல் விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மீண்டும் ரபேல் முறைகேடு பற்றி பேச ஆரம்பித்துள்ளார். 
ஜார்கண்டில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அந்த ஒப்பந்தம் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் தவறான முறையில், அனில் அம்பானியிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை பாதுகாத்துவரும் விமானப்படையிடமிருந்து, பணத்தை பிரதமர் மோடி பறித்துவிட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
source: ns7.tv