Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 16 மார்ச், 2019

இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட கார் ஓட்டுநர்! March 16, 2019

Image
பொள்ளாச்சி விவகாரத்தை தொடர்ந்து நாகையிலும் இளைஞர் ஒருவர் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நாகை மாவட்டம் வண்டிபேட்டையைச் சேர்ந்த சுந்தர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை, நகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. 
இந்த விவகாரத்தில் நாகையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து, அதிரடியாக சென்னை விரைந்த போலீசார் சுந்தரை கைது செய்து அவரது கைபேசியை  சோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களுடன் சுந்தர் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ இருந்தது தெரிய வந்துள்ளது.
சுந்தர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

credit : ns7.tv