Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை! April 27, 2019

source ns7.tv
Image
புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வரும் 29, 30ம் தேதிகளில் செல்ல  தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுற்றுலா தலங்களான பேரிஜம் ஏரி, மோயர் பாயின்ட், குணா குகை, பில்லர் ராக், ஃபைன் மர காடுகள் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் புயல் ஏற்படும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்க மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி அறிவுறுத்தலின்படி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில் மே 1-ந்தேதி கோடை விழா தொடங்கும் என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் ரத்து செய்யபடுவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.