Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 29 ஏப்ரல், 2019

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல்! April 29, 2019

Image
நாடாளுமன்ற மக்களவைக்கு இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. 
அன்சோல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு படையினர், போலீசார் இருந்தும், அவர்கள் முன்னிலையிலே மோதல் நடைபெற்றது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் பல முறை எச்சரித்தும் அவர்கள் செல்லவில்லை. மாறாக பெண்கள் உட்பட பலரும், நீளமான உருட்டுக் கடைகளுடன் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசாரும், தேர்தல் சிறப்பு பாதுகாப்புப் படையினரும், தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழல் உருவானது. 
வன்முறை சம்பவம் நடந்த அசன்சோல் வாக்குச் சாவடியை, மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என குற்றம்சாட்டினார். வாக்காளர்களை,  திரிணாமுல் தொண்டர்கள் வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் குறைகூறினார்.

source ns7.tv