Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 9 மே, 2019

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளுக்கு மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு! May 09, 2019

Image
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளுக்கு, மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும், என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 46 வாக்குச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில், மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 
இதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வரும் 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
source ns7.tv