Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 11 மே, 2019

போடி அருகே பண்ணை வீட்டில் AK47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்...! May 11, 2019

ns7.tv
Image
போடி அருகே பண்னை வீட்டில் கொள்ளையர்கள் பதுக்கி  வைத்திருந்த ஏ.கே 47, உள்ளிட்ட 6 துப்பாக்கிகள் மற்றும் கத்தி, வேல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கெளர் மோகன்தாஸ் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் தங்கியுள்ள பத்துக்கு மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு தேனியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி அழகுராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் காரில் வைத்திருந்த இரண்டு பெட்டிகளை சோதனையிட்ட போது, அதில் ஏகே 47 ஒன்றும், கைத்துப்பாக்கி, இரட்டை குழாய் துப்பாக்கி  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். காரும், ஆயுதங்களும் கெளர் மோகன்தாஸ் சொந்தமானது எனகூறியதால் அவரையும் போலீசார் பிடித்து சென்றனர்.
மேலும் அங்கிருந்து தப்பியோடிய நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி வினியோகம் செய்திட பதுக்கி வைத்திருந்தார்களாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.