Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 5 மே, 2019

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை என ஜோதிமணி புகார்! May 05, 2019

Image
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா முறையாக இயங்கவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு பெட்டிகள் தளவாய் பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமரா முறையாக இயங்கவில்லை என எழுந்த புகாரை அடுத்து, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாள ஜோதிமணி, அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய அவர், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி கேமரா 2மணி நேரம் கூடுதலான காட்சிகளை காட்டுவதாக தெரிவித்தார். இதனால், அங்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
source ns7.tv