Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 12 மே, 2019

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறுத்தப்படும்: கே.பாலகிருஷ்ணன் May 12, 2019

Image
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும், அவ்வாறு நிறுத்தாவிடில் பாஜகவிற்கு ஏற்பட்ட நிலைதான் காங்கிரசுக்கு ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறும் என்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 5ந் தேதி முதல் 10ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்றும், இதில் மாநில தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 
மழைக்காக யாகம் நடத்த கூறுவது தமிழக அரசின் பொறுப்பற்ற செயலையே காட்டுவதாகவும் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.