Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 19 மே, 2019

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி : சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்! May 19, 2019

Image
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதும், அவர்களே ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதும் நரேந்திர மோடி ஆட்சியின் சீர்குலைவையே காட்டுவதாகக் கூறினார். சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா அமோகமாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணன், இதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை என குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.