Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 22 மே, 2019

காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ராகுல் எச்சரிக்கை! May 22, 2019

அடுத்த 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், என காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொண்டர்களுக்கு  விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தகவல் அனைத்தும் தவறான பிரச்சாரம் என குறிப்பிட்டுள்ள அவர், இதை கண்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும், உங்கள் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். தொண்டர்களின் உழைப்பு  ஒருபோதும் வீண் போகாது என்றும், தன் கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
மேலும், அடுத்து வரக்கூடிய 24 மணி நேரம், முக்கியமான தருணம்,  தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என, ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
कांग्रेस पार्टी के प्रिय कार्यकर्ताओं ,

अगले 24 घंटे महत्वपूर्ण हैं। सतर्क और चौकन्ना रहें। डरे नहीं। आप सत्य के लिए लड़ रहे हैं । फर्जी एग्जिट पोल के दुष्प्रचार से निराश न हो। खुद पर और कांग्रेस पार्टी पर विश्वास रखें, आपकी मेहनत बेकार नहीं जाएगी।

जय हिन्द।

राहुल गांधी
17.3K people are talking about this