Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 23 மே, 2019

காங்கிரஸ் பின்னடைவு! May 23, 2019

7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இதுவரை 399க்கும் அதிகாமான தொகுதிகளின் முன்னணி நிலவரம் தெரியவந்துள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 241 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி 102 இடங்களிலும், இதர கட்சிகள் 81 தொகுதிகளிலும் முன்னணி பெற்றுள்ளன.
அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்தது. தற்போது வரக்கூடிய முன்னணி நிலவரங்களில் பாஜகவின் கையே மேலோங்கியுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க வகையில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னவடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்றுள்ளார். இதே போல ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
முன்னிலை நிலவரங்கள் வரத்தொடங்கியதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ள அதே நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.