Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 ஜூன், 2019

தலைமைச் செயலக ஊழியர்கள் உடை அணிவதில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு! June 02, 2019

Image
தலைமைச் செயலக ஆண் ஊழியர்கள் பேண்ட், சட்டை அணிந்து வரவேண்டும் என அரசாணை வெளியான நிலையில், வேட்டியும் அணிந்து வரலாம் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதன்படி பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் அணிய வேண்டும் எனவும், ஆண்கள் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், அந்த உத்தரவில் திருத்தம் செய்து ஆண்கள் வேட்டி அணிந்து வரலாம் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.