Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 ஜூன், 2019

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு! June 02, 2019


Image
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 14ம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 
அதன்படி, பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. அன்றைய தினமே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. இதற்காக பள்ளிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், சீருடைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.