Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 18 ஜூன், 2019

காவல்துறையினர் துன்புறுத்துவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் புகார்! June 17, 2019

Image
மதுரை அருகே பொய் வழக்கு பதிவு செய்து காவல்துறை துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள எஸ்.வலையப்பட்டியில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒரு பிரிவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆண்கள் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இதனால், அதிர்ச்சியடைந்த 35-க்கும் மேற்பட்ட ஆண்கள் கிராமத்தை விட்டே வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோடு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.