Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 24 ஜூலை, 2019

பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் இயங்கி வந்ததாக பிரதமர் இம்ரான் கான் தகவல்! July 24, 2019

Image
பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். 
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை, முந்தைய பாகிஸ்தான் அரசுகள், கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் தெரிவிக்கவில்லை என கூறினார். 
தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி வந்தபோது, தம்மை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தங்கள் நாடு இருந்ததாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்ட இம்ரான் கான், தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் தொடர்பாக தன்னைப் போன்றவர்கள் அப்போது அச்சத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். 
credit ns7.tv