Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 7 ஜூலை, 2019

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்: காங்கிரஸ் எம்.பி கருத்து July 07, 2019

Image
ராகுல் காந்தியை தவிர வேறு யாரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார். 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் எனவும் மாணிக்கதாகூர் கூறினார்.
credit ns7.tv