Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..!

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான, அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மானுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
Credit NS7.tv


பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் @piyushmanush அவர்கள், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்!
இதைப் பற்றி 897 பேர் பேசுகிறார்கள்