Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே ரேசன் வரிசையில், ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 ஆதார், பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண் போன்ற அனைத்தும் தகவல்களும் பல்நோக்கு மின்னணு அடையாள அட்டையில் இடம்பெறும் என்று கூறினார். 
குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் ஒரே அடையாள அட்டையில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 
2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியானது, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப் பிரதேசங்களில் நடப்பாண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்றும், பிற மாநிலங்களில், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றும் அமித்ஷா கூறினார்.
credit ns7.tv