Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 23 அக்டோபர், 2019

திருப்பத்தூர் மற்றும் காளையார்கோவிலில் 144 தடை உத்தரவு!


Image
மருதுபாண்டியார் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் காளையார்கோவிலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை போரில் உயிர்நீத்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் வருகிற 24ஆம் தேதி அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வருகிற 27ம் தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரும்பொன்னில் வருகிற 31ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. 
இந்த விழாக்களில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் வருகிற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜெயக்காந்தன் ஆணையிட்டுள்ளார். 
credit ns7.tv