Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆம்புலன்ஸில் எரிபொருள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி

ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ், எரிபொருள் பற்றாக்குறையால் நடுவழியில் நின்றதால், அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 
ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த துளசி முண்டா  என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை, அவரது கணவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துளசியை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் கணவர் தவித்துள்ளார். அவசர அழைப்பு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. 
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து கர்ப்பிணி மனைவியை அழைத்து சென்றார். கர்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ், எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்றது. அடுத்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதம் ஆன நிலையில், கர்ப்பிணிப் பெண்ணான துளசி முண்டா பரிதாபமாக உயிரிழ்ந்தார் உயிரிழந்தார். 

credit ns7.tv