Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 7 அக்டோபர், 2019

பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக திருநாவுக்கரசர் விமர்சனம்!

ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுக களப்பணியை விட, பணப் பணியில் அதிகமாக ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். 
நாட்டில் ஜனநாயகத்திற்கு புறம்பான ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட திருநாவுக்கரசர், பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

credit ns7.tv