Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது....!

Image
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்த அவர்கள், 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv