Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

குழந்தைகள் குறித்த ஆபாச படம் பார்க்கும் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயார்: காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி


Image
தமிழகத்தில் குழந்தைகள் குறித்த ஆபாச படம் பார்க்கும் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் குழந்தைகள் குறித்த ஆபாச படம் பார்க்கும் மூவாயிரம் பேர் கொண்ட பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி  தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ஆபாச படம் பார்ப்பவரை காவலர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், அதை நம்ப வேண்டாம் என்றும், போலீசார் செல்போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள் எனவும் காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி விளக்கம் அளித்துள்ளார். 

credit ns7.tv