Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 6 டிசம்பர், 2019

நித்தியானந்தாவின் ’கைலாசா’ தீவிற்கு பறக்கிறாரா அஸ்வின்?

Image
கைலாசா தீவிற்கு செல்ல விசா பெறுவது எப்படி என  நித்தியானந்தாவை கலாய்த்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் தற்சமயம் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்கள் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது .தற்சமயம் அவரது அகமதாபாத ஆசிரமமும் மூடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் தினமும் ஒரு வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஈக்வேடர் நாட்டில் தனித் தீவு ஒன்று வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை கிண்டல் செய்யும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கைலாசா தீவிற்கு செல்ல விசா பெறுவது எப்படி என்று கிண்டலாக ட்வீட் ஒன்று செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
credit ns7.tv