Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 18 ஜனவரி, 2020

முரசொலி நாளிதழ்

Image
முரசொலி வைத்திருந்தால் மனிதன் என்றும், தமிழன் என்றும் பொருள் என நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு முரசொலி நாளிதழ் விளக்கமளித்துள்ளது.
துக்ளக் விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முரசொலி நாளிதழை விமர்சித்து பேசினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முரசொலி நாளிதழில் ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் எனவும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னத கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள் எனவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் எனவும், தமிழர் நலன் காப்போன் என்று பொருள்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது. முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள் படும் எனவும்  முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என்று பொருள் எனவும் விளக்கமளித்துள்ளது
credit ns7.tv