Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு!

Image
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற இடத்தில் மீண்டும் ஒருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
டெல்லி ஷகீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, இந்த கூட்டத்துக்குள் புகுந்து பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்த அந்த இளைஞர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இளைஞர்  நொய்டாவுக்கு அருகில் உள்ள தள்ளுபுறா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது, இந்துக்கள் மட்டுமே இந்தியாவை ஆள முடியும் என அவர் உரக்க கூறியபடி அவர் சென்றார். 

credit ns7.tv