Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 3 பிப்ரவரி, 2020

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் உருவாகும் என்று பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மண்டல பாஜக துணைத் தலைவர் விஜயரகு கொலை வழக்கில், மிட்டாய் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  பாஜக பிரமுகர் விஜயரகு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறினார். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு திமுக துணை போவதாகவும், இது தொடர்ந்தால், தமிழகத்தில் இந்து தீவிரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ராஜேந்திர பாலாஜியின் பேச்சிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பாஜகவுக்கு, அதிமுக பாதம் தாங்குவது குறித்து திமுகவுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியுள்ளார். அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறை பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார். 
photo
அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர், கண்களுக்கு முன்னால் மதசார்பின்மைக்கு எதிராக பேசுவதாகவும் ஸ்டாலின் குறை கூறியுள்ளார். மக்களை மதரீதியாக துண்டாட துணிவதாகவும் விமர்சித்துள்ளார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார். 

credit ns7.tv