Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 31 மே, 2020

வட இந்தியாவை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளது: தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின்

கொரோனோ விவகாரத்தில், தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தை, வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடரக் கூடாது, என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மாநிலங்களில், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள், தற்போது தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களுக்க வரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், இங்குள்ள வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு, என அறிவியலாளர்கள் கூறியுள்ளதாகவும், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும், என அவர்கள் எச்சரித்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.