Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 5 மே, 2020

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு!

Image
UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக, 2020-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் வருகிற 31ம் தேதி நடைபெறவிருந்தது. மே 3-ம் தேதி முடியவிருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டு மே 17-ம் தேதி வரை அமலில் உள்ளது. 
அதனால் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி தொடர்பாக மே 20-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும், இதுதொடர்பான தகவல்களை யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv