Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 23 ஜூன், 2020

கொரோனா தடுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் தமிழக அரசு அலட்சியம்! - ஸ்டாலின்

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, அதிமுக அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது, பரிசோதனை எண்ணிக்கை உயராததில் இருந்து தெரிவதாக கூறியுள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் உயிர் காக்கும் உத்தரவையே, சரியாக புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்து அதிமுக அரசு புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களை காப்பாற்ற, உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.