Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 22 ஜூலை, 2020

சாத்தான்குளம் காவல்நிலைய சர்ச்சை: போலீசாருக்கு மீண்டும் சிக்கல்

Image

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மகேந்திரன் என்பவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. 

தெற்கு பேய்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் கடந்த மே மாதம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் சில போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரனையானது நடைபெற்றபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.