Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 18 ஜூலை, 2020

முகமது நபி பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு வீடியோ வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி கைது

Image

முகமது நபி பற்றி பேஸ்புக்கில் அவதூறு வீடியோ வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருப்பர் கூட்டம் என்ற இணையதளத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சையாக பதிவிடப்பட்டது. இதனை இஸ்லாமியர்கள் தான் செய்ததாக தவறான கருத்து பரவியது. இதையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இந்து தமிழர் பேரவை பொது செயலாளர் கோபால்  என்பவர் முகமது நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டார்.

இதனால் கோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறையிடம் புகார் அளித்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கோபாலை கைது செய்தனர். வருகிற 28ஆம் தேதி வரை கோபாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.