Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 2 செப்டம்பர், 2020

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை,  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ மழையும்,  திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 11 செ.மீ மழையும் பதிவானது.