Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 21 செப்டம்பர், 2020

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தினர் கைது!

Image

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மக்கள் பாதை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை இயக்கத்தினர் 7 வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களளை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனை அடுத்து, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதை இயக்கத்தினர் 6 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

 

அதேபோல் மற்ற மக்கள் பாதை இயக்கத்தினர் நெற்குன்றம் லட்சுமி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தர மறுத்து திருமண மண்டபத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.