Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 20 ஏப்ரல், 2023

ராகுல் காந்தி மேல்முறையீடு மனு டிஸ்மிஸ்;

 

Surat sessions court dismisses Rahul Gandhis appeal What happens now
குஜராத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தி தற்போது வயநாடு எம்.பி. பதவியை இழந்துள்ளார். இதனால் அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

ராகுல் காந்தி எதற்காக தண்டிக்கப்பட்டார்?

ஏப்ரல் 13, 2019 அன்று, லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில், கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களுக்கும் ஏன் குடும்பப்பெயர் மோடி என இருக்கிறது? எனக் கேட்டார்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர் பாஜக தலைவரும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் தனிப்பட்ட முறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வெளியான நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு என்ன நடந்தது?

ஏப்ரல் 3 ஆம் தேதி, ராகுல் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் இரண்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்தார்.
அதில் ஒன்று தண்டனையை நிறுத்தி வைப்பது ஆகும்.
மற்றொன்று தகுதிநீக்க உத்தரவை எதிர்த்து வாதாடுவது நியாயமானது என செசன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர் பி மொகேரா தனது உத்தரவை ஏப்ரல் 20 ஆம் தேதி அறிவிப்பதாகக் கூறினார்.

இப்போது என்ன நடந்தது?

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “எல்லா விருப்பங்களையும்” ஆராய்வோம் என்று கூறியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராகுல் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதே ஆகும்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தால் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்படலாம்

. 2018 ஆம் ஆண்டு ‘லோக் பிரஹாரி வி யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற தீர்ப்பில், தகுதி நீக்கம் “மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து செயல்படாது” என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மேலும், குறிப்பிடத்தக்க வகையில், தடை என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 389 இன் கீழ் தண்டனையை இடைநிறுத்துவதாக இருக்க முடியாது.
CrPC இன் பிரிவு 389 இன் கீழ், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, ஒரு குற்றவாளியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தலாம். இது மனுதாரரை ஜாமீனில் விடுவிப்பதற்கு ஒப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

20 4 2023


source https://tamil.indianexpress.com/explained/surat-sessions-court-dismisses-rahul-gandhis-appeal-what-happens-now-644770/