Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 19 ஆகஸ்ட், 2023

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை!

 

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதில் குக்கி சமூகத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரை ஆயுதமேந்திய கும்பல் வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குக்கி பழங்குடியினர் வசிக்கும் தௌவாய் குகி என்ற கிராமத்தில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பல் மலைகளில் இருந்து கிராமத்தை நெருங்கி கிராம காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க மாநில காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில்160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

source https://news7tamil.live/violence-in-manipur-as-3-members-of-kuki-community-killed.html