Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 22 மே, 2025

இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடைவிதிக்க TNTJ கோரிக்கை

 இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு  தடைவிதிக்க TNTJ கோரிக்கை 22 05 2025 



பாலஸ்தீனில் குழந்தைகள் பெண்கள் உட்பட  ஆயிரக்கணக்கானோர் கொடூரமாக  கொல்லப்பட காரணமான மனித குலவிரோதி இஸ்ரேல் ஆகும். 


கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. 

அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது


இந்நிலையில் அகதிகளாய் சுற்றித்திரிந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனத்தை சூறையாடி கொண்டிருக்கும்  இஸ்ரேலின்   துரோக கலாச்சாரத்தை போற்றும் வகையில் "இஸ்ரேலிய திரைப்பட விழாவை"  தமிழக மண்ணில் நடத்துவது வெட்ககேடான செயல் ஆகும்.


அனைத்து மக்களின் உணர்வுகளையும் மதித்து நடக்கும் தமிழக அரசு இஸ்ரேலிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்த அனுமதி அளித்துள்ள நிகழ்வு   இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எனவே மே 29 அன்றுமுதல் சென்னையில் நடைபெற உள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்..


இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்