Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 17 ஜூன், 2025

மதராஸி கேம்ப் இடிப்பு: பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

 

மதராஸி கேம்ப் இடிப்பு: பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

Madarasi Camp

டெல்லி மதராஸி கேம்ப் பாதிப்பு - ரூ. 50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் ஊழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா 8 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிடவும் ஏதுவாக, இன்று (16-6-2025) முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஈடுக்குமாறு வலியுறுத்தி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். 

17 6 2025 

அக்கடிதத்தினை கடந்த 10-6-2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவர்களை நேரில் சந்தித்து வழங்கியதோடு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announces-relief-for-tamil-families-evicted-madrasi-camp-in-delhi-9369565