Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 26 ஜூன், 2025

சிலருக்கு தான் முதலில், பிறகுதான் நாடு': நாம் என்ன செய்ய முடியும்? தரூரை சீண்டிய கார்கே

 

Mallikarjun Kharge Shashi Tharoor

Congress President Kharge snipes at Tharoor, says for some ‘Modi first, country later’

புது தில்லி, ஜூன் 25: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூரை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். "நாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. ஆனால், சிலருக்கு 'மோடி முதலில், பிறகுதான் நாடு' என்ற மனநிலை உள்ளது" என்று கார்கே சாடினார்

புதன்கிழமை (ஜூன் 25, 2025) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கார்கே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். 'ஆபரேஷன் சிந்துர்' குறித்து பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து சசி தரூர் எழுதிய கட்டுரை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்கே, "எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் படிக்கத் தெரியாது. அவரது (தரூர்) ஆங்கிலப் புலமை மிகச் சிறப்பானது. அதனால்தான் அவரை காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக நியமித்தோம்" என்று கிண்டலாகக் கூறினார்.

மேலும், "எதிர்க்கட்சி மக்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்துரில் போராடும் ராணுவத்துடன் இருக்கிறார்கள். 'நாடுதான் முக்கியம்; நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நாடு முதலில், கட்சி பிறகு' என்று நாங்கள் (காங்கிரஸ்) கூறினோம். ஆனால், சிலரோ 'மோடி முதலில், பிறகுதான் நாடு' என்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கார்கே கேள்வி எழுப்பினார்.

சசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டபோது, "மக்கள் அவரவர் விருப்பப்படி எழுதுவார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட விரும்பவில்லை. நாட்டின் ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு என்பதே எங்கள் ஒரே குறிக்கோள். நாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கடந்த காலத்திலும் போராடியுள்ளோம், எதிர்காலத்திலும் போராடுவோம். யார் என்ன சொன்னாலும் அதற்கு கவனம் செலுத்தத் தேவையில்லை" என்று கார்கே தெரிவித்தார்.

தரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அஞ்சுகிறதா என்று மற்றொரு செய்தியாளர் கேட்டதற்கு, "ஏன் பயப்பட வேண்டும்? இது எங்கள் கட்சி, நாங்கள் இருக்கிறோம். சுமார் 34 காரியக் கமிட்டி உறுப்பினர்கள், 34 நிரந்தர அழைப்பாளர்கள், சுமார் 30 சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளனர். அவர் இப்போது தனது விருப்பப்படி பேசுகிறார். அதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. நாட்டைக் காப்பாற்றுவது எப்படி என்பதே எங்கள் கவலை. வேறு எதைப் பற்றியாவது ஒருவருக்குக் கவலை இருந்தால், அதை நீங்கள் அவரிடம் கேட்கலாம்" என்று கார்கே பதிலளித்தார்.

கார்கேவின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, சசி தரூர் தனது 'X' பக்கத்தில் ஒரு குறியீட்டுப் பதிவைப் வெளியிட்டார். அதில் ஒரு பறவையின் படம் மற்றும் "பறக்க அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையவை. வானம் யாருக்கும் சொந்தமில்லை.." என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


source https://tamil.indianexpress.com/india/mallikarjun-kharge-shashi-tharoor-congress-modi-operation-sindoor-9417258