Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 1 டிசம்பர், 2025

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்; சென்னை அருகே 30 கி.மீ தொலைவில்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்

 

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்; சென்னை அருகே 30 கி.மீ தொலைவில்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட் 01 12 2025



chennai rain d

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘டித்வா’ புயல் கரையைக் கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் சின்னம் வடதமிழகம் நோக்கி நகா்ந்து மேலும் வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு பலத்த மழை அபாயம் நீங்கியது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவம்பர் 30, 2025) இரவு 11:30 மணியளவில் அதே பகுதியில் (12.3°N அட்சரேகை மற்றும் 80.6°E தீர்க்கரேகை) மையம் கொண்டிருந்தது. தற்போது வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து இந்த அமைப்பின் மையப்பகுதி குறைந்தபட்சம் 50 கி.மீ தொலைவில் உள்ளது.

சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு கிழக்கு-வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடக்கு-வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இந்த அமைப்பு வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகரக்கூடும். இன்று (டிச.1) நண்பகலுக்குள் இது படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை வேளையில், இந்த அமைப்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையிலிருந்து 30 கி.மீ தொலைவிற்குள் மையம் கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-ditwah-remnant-system-to-weaken-into-depression-by-noon-today-10826853