Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 டிசம்பர், 2017

தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! December 13, 2017

Image

கச்சத் தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அருகே வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்தது. மேலும், 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 27 பேரையும், 26ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.  இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது, தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.