Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 டிசம்பர், 2017

​கொள்ளையடித்துவிட்டு செல்போன் எண்ணை எழுதிவைத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்! December 14, 2017

Image

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தொலைபேசி எண்ணையும் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்ஸில் 10க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த காம்ப்ளக்ஸ் மாடியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பேருந்து புக்கிங் அலுவலகத்தின் பூட்டை உடைத்து கண்ணாடிகளை உடைத்து சென்றதுடன் அந்த கண்ணாடியில் ஒரு தொலைபேசி எண்ணையும் எழுதி வைத்து சென்றுள்ளனர். அதே போன்று பைனான்ஸ் அலுவலக பூட்டை உடைத்து உள்ளேயும் அதே தொலைபேசி எண்ணை எழுதி சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் சிம்கார்ட் இல்லாத ஒரு செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.