Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 டிசம்பர், 2017

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை! December 14, 2017

Image

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று பார்வையிடுகிறார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் ராகுல்காந்தி இன்று காலை 11 மணிக்கு குமரி மாவட்டம் தூத்தூரில் உள்ள யூதா கல்லூரியை வந்தடைகிறார். 

அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு செல்லும் ராகுல் காந்தி, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 

மேலும் புயலால் நெற்பயிர்களையும், ரப்பர், வாழை, தென்னை உள்பட பயிர்களை இழந்த விவசாயிகளையும் சந்தித்து பேசும் ராகுல், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளார்.